கொழும்பின் பல பகுதிகளுக்கு நீண்ட நேரம் நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் காரணமாக நீர் விநியோகம் தடைப்படும் அந்த சபை தெரிவித்துள்ளது.
அதன்படி நாளை (30) இரவு 9 மணி முதல் நாளை மறுநாள் (31) காலை 8 மணி வரை கொழும்பு 09, 10, 11 மற்றும் 12 ஆகிய பகுதிகளில் 11 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும் நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.