நாட்டில் 100,000 குடும்பங்கள் தினமும் உணவு இல்லாமல் பட்டினியில் வாடுவதாக உணவு பாதுகாப்பு குழுவின் தலைவர் கலாநிதி சுரேன் படகொட தெரிவித்தார்.
மேலும், 75,000 குடும்பங்கள் தினமும் என்ன சாப்பிடுவது என்று தெரியாத நிலையில் இருப்பதாக தெரியவந்துள்ளது.
தற்போது நிலவும் நெருக்கடிக்கு உரிய தீர்வுகள் உடனடியாக வழங்கப்படாவிட்டால் இந்த நிலைமை மிகவும் ஆபத்தானதாக அமையும் என அவர் எச்சரித்துள்ளார்.
இதேவேளை, நாட்டின் விவசாயத்தை முழுமையாக மேம்படுத்துவதற்கு வருடாந்தம் 900 மில்லியன் டொலர்கள் செலவிடப்படும் என விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அமரவீர தெரிவித்தார்.