காலிமுகத்திடல் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த உருகுனு பல்கலைக்கழகத்தின் மாணவர் ஒன்றிய இணைப்பாளர் அந்தோனி வேரங்க புஸ்பிகா டி சில்வா என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நீதிமன்ற உத்தரவை மீறி போராட்டம் நடத்தி பொது சொத்துகளுக்கு சேதம் விளைவித்ததாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
அண்மையில் மற்றுமொரு காலிமுகத்திடல் போராளியான தனீஷ் அலி, டுபாய் செல்ல முற்பட்ட போது விமானத்தில் இருந்து கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.