இன்று (26) நண்பகல் முதல் நுகேகொடை பேருந்து நிலையத்தில் இருந்து ஆரம்பிக்கும் பாதை இலக்கம் 119, 168, 117, 176, 183, 259, 689 ஆகிய இலக்கங்களுக்கு உட்பட்ட அனைத்து தனியார் பேருந்து சாரதிகளும் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
எரிபொருளை கோரி இந்த பணிப்புறக்கணிப்பை அவர்கள் ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.