திருத்தப்பட்ட பாதீடு அடுத்த மாதத்திற்குள் சமர்ப்பிக்கப்படும் என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்ட அவர், தற்போது அனைத்து அமைச்சுக்களின் வரவு செலவுத் திட்டங்களும் திருத்தப்பட்டு புள்ளிவிபரங்கள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.