வெல்லம்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஒருகொடவத்த மேம்பாலத்திற்கு அருகில் நபர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளார்.
நேற்று (25) இரவு மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் இக்கொலையை செய்து தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மீதொட்டமுல்ல வெல்லம்பிட்டி பகுதியைச் சேர்ந்த 34 வயதான ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இவர் சமூக ஆர்வலரான டேன் பிரியசாத்தின் சகோதரர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சந்தேக நபர்கள் இதுவரை கைது செய்யப்படவிலை என்பதுடன், பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.