ஜனாதிபதி மாளிகையில் திருடப்பட்ட சில பொருட்களை விற்பனை செய்ய தயாராக இருந்த மூவர் வெலிக்கடை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 9ம் திகதி ஜனாதிபதி மாளிகைக்குள் நுழைந்த குறித்த நபர்கள், ஜன்னல் திரைச்சீலைகளுக்காக சுவர்களில் பொருத்தப்பட்டிருந்த 40 தங்க நிற பித்தளை உருண்டைகளை திருடி, அவற்றை பழங்காலப் பொருட்களாக விற்பனை செய்ய தயாராக இருந்த நிலையில் கைதாகியுள்ளனர்.
ராஜகிரிய, ஒபேசேகரபுர பிரதேசத்தை சேர்ந்த 28, 34 மற்றும் 37 வயதுடைய மூவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த சந்தேக நபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக ஜனாதிபதி மாளிகையில் விசாரணைகளை மேற்கொள்ளும் குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.