முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன வசித்த கொழும்பு பேஜெட் வீதியிலுள்ள இல்லத்தை, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் உத்தியோகபூர்வ இல்லமாக வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இரண்டு மாதங்களுக்கு முன்னர், நீதிமன்ற உத்தரவின் படி குறித்த இல்லத்தை அகற்ற முன்னாள் ஜனாதிபதி நடவடிக்கை எடுத்திருந்தார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தனிப்பட்ட வீடு தீக்கிரையாக்கப்பட்டதுடன், அவர் தற்போது பாதுகாப்பான இடத்தில் வசித்து வருகிறார்.
அத்துடன், ஜனாதிபதி மாளிகை மற்றும் அலரி மாளிகை என்பன வசிக்க ஏற்ற நிலையில் இல்லாததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.