காலிமுகத்திடலில் அமைக்கப்பட்டிருந்த கோட்டா கோ கம போராட்டம் இரவோடு இரவாக இராணுவ படையினரால் கலைக்கப்பட்டது.
இதனால் அந்த பகுதியில் பெரும் பதற்றம் நிலவுவதாக தெரிவிக்கப்படுகிறது.
100 நாட்களை கடந்து அமைதியான முறையில் இந்தப் போராட்டம் நடைபெற்று வந்தது.
ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாகப் பதவியேற்ற மறுநாளே இந்த போராட்டம் இரவோடிரவாக படையினரால் கலைக்கப்பட்டுள்ளது.
தற்போது ஜனாதிபதி செயலகம் மற்றும் அதனை அண்டிய பகுதிகளை படையினர் கைப்பற்றியுள்ளனர்.