காலிமுகத்திடலில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் தங்களது போராட்டத்தை தொடர்வதற்கு புதிய இடம் ஒன்றை ஒதுக்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தீர்மானித்துள்ளார்.
இந்த தகவலை தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
அவர்களுக்காக விகாரமகாதேவி பூங்காவில் இடம் ஒதுக்கி தருவதாகவும், அங்கு அவர்கள் சுதந்திரமாக போராட்டத்தை நடத்த முடியும் என ஜனாதிபதி கூறியதாக அவர் குறிப்பிட்டார்.