இத்தாலி பிரதமர் மரியோ டிராகி தனது பதவியை இராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளார்.
அவரது தலையீட்டால் 17 மாதங்களுக்கு முன்பு அமைக்கப்பட்ட கூட்டணி ஆட்சி கவிழ்ந்ததால் அவர் இந்த முடிவை எடுத்துள்ளார்.
இத்தாலிய ஜனாதிபதி செர்ஜ் மேட்டரெல்லாவை சந்தித்து தனது இராஜினாமா கடிதத்தை கையளித்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
இதன்போது, புதிய அரசாங்கம் நியமிக்கப்படும் வரை ட்ராகி பிரதமராக இருக்க வேண்டும் என்று அதிபர் மேட்டரெல்லா கூறினார்.
அதன்படி, ட்ராகி தற்காலிக பிரதமராக நீடிப்பார் என தெரிவிக்கப்படுகிறது.