நடப்பு அமைச்சரவை இன்னும் சில காலம் நீடிக்கும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
அதன்படி, குறுகிய காலத்திற்கு, தற்போதுள்ள அமைச்சர்கள், அமைச்சகங்களின் பணிகளை கவனிக்கவுள்ளனர்.
ரணில் விக்கிரமசிங்க இன்று (21) ஜனாதிபதியாக பதவிப் பிரமாணம் செய்து கொண்டதன் பின்னர் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதுடன், மிக விரைவில் பிரதமர் ஒருவர் நியமிக்கப்படுவார் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.