வெளிநாட்டு தபால்களுக்கான சேவைக் கட்டணத்தை அதிகரிக்க தபால் திணைக்களம் தீர்மானித்துள்ளது.
அதன்படி, உரிய கட்டண உயர்வு ஆகஸ்ட் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வருகிறது.
இதேவேளை, அமெரிக்கா, நெதர்லாந்து, இஸ்ரேல் மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளுக்கான தபால் பொருட்களை ஏற்றுக்கொள்வது மேலும் இடைநிறுத்தப்பட்டுள்ளது.
தற்போது நிலவும் எரிபொருள் நெருக்கடி காரணமாக விமான சேவைகள் மட்டுப்படுத்தப்பட்டள்ளமையினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தபால் மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன தெரிவித்துள்ளார். .