எதிர்வரும் ஓகஸ்ட் மாத தொடக்கத்தில் இருந்து மின்சாரக் கட்டணம் அதிகரிக்கப்படும் எனவும் தற்போதுள்ள மின்சாரக் கட்டணம் 69 வீதத்தால் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
மின் கட்டணத்தை 130 வீதமாக அதிகரிக்குமாறு மின்சார சபை கோரிய போதிலும், குறைந்த மின் பாவனையாளர்களுக்கு சலுகைகளை வழங்கி உரிய கட்டணத்தை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.