Friday, September 20, 2024
29 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமரத்தில் ஏறிய நபர் மீது குளவிக்கொட்டு - கீழே வீழ்ந்து பரிதாபமாக பலி

மரத்தில் ஏறிய நபர் மீது குளவிக்கொட்டு – கீழே வீழ்ந்து பரிதாபமாக பலி

தலவாக்கலை – மடக்கும்புர பகுதியில் மரமொன்றில் ஏறிய ஒருவர், குளவிக்கொட்டுக்கு இலக்கான நிலையில் கீழே வீழ்ந்து உயிரிழந்தார்.

விறகு சேகரிப்பதற்காக மரமொன்றில் ஏறிய போது அவர் இந்த சம்பவத்தை எதிர்கொண்டுள்ளார்.

இதனையடுத்து அவர் மரத்திலிருந்து கீழே விழுந்து உயிரிழந்ததாக பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

உயிரிழந்தவர் மடக்கும்புர பகுதியைச் சேர்ந்த 31 வயதுடையவராவார்.

அத்துடன்இ இதன்போது மற்றுமொருவர் காயமடைந்த நிலையில், லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles