Friday, September 20, 2024
31 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதேர்தல் தொடர்பான சுரொட்டி ஒட்டினால் 50,000 ரூபா அபராதம்

தேர்தல் தொடர்பான சுரொட்டி ஒட்டினால் 50,000 ரூபா அபராதம்

தேர்தல் சட்டத்தை மீறுபவர்களுக்கு வழங்கப்படும் அபராதம் மற்றும் தண்டனை அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது.

தற்போதுள்ள சட்டத்தின் பிரகாரம் தேர்தல் விதிமுறைகளை மீறி சுவரொட்டி ஒட்டினால் விதிக்கப்படும் 50 ரூபா தண்டப்பணம் புதிய சட்டத்தின் கீழ் ஒரு சுவரொட்டிக்கு 50,000 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் வன்முறை கண்காணிப்பு நிலையத்தின் தேசிய அமைப்பாளர் மஞ்சுள கஜநாயக்க தெரிவித்துள்ளார்.

இதன்படி, சமூக வலைத்தளங்களில் பொய்ப் பிரச்சாரம் செய்தல் அல்லது சுவரொட்டிகள் ஒட்டுதல் போன்றவற்றை எந்த வகையிலும் அல்லது குழுவுடன் இணைந்து அல்லது தேர்தல் விதிமுறைகளை மீறினால் சிறைத்தண்டனை கூட விதிக்கப்படும் என அவர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.

Keep exploring...

Related Articles