Thursday, September 19, 2024
30 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகட்டிலில் இருந்து கீழே விழுந்த நபர் பரிதாபமாக பலி

கட்டிலில் இருந்து கீழே விழுந்த நபர் பரிதாபமாக பலி

யாழ்ப்பாணத்தில் கட்டிலில் இருந்து விழுந்து ஒருவர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் காத்தான்குடி பகுதியைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தை என எமது செய்தியாளர் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் பணிபுரிந்து வந்த அவர் இரவு உறங்கிக் கொண்டிருந்த போது கட்டிலில் இருந்து தவறி விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பின்னர், உடனடியாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர் அங்கு உயிரிழந்துள்ளார்.

பிரேத பரிசோதனையின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

Keep exploring...

Related Articles