Friday, April 18, 2025
27.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇலங்கை மீனவர்கள் மூவர் இந்தியாவில் கைது

இலங்கை மீனவர்கள் மூவர் இந்தியாவில் கைது

இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறிய குற்றச்சாட்டில் 3 இலங்கை மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இராமேஸ்வரத்தை அண்மித்த கடற்பகுதியில் வைத்து மேற்படி கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

வங்காள விரிகுடா கடற்பகுதியில் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த இந்திய கடலோர காவல்படையினரால் குறித்த மூவரும் கைது செய்யப்பட்டனர்.

கைதானவர்கள் யாழ்ப்பாணத்தின் கொழும்புத்துறை மற்றும் தாழையடி – உடுத்துறை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 34, 37 மற்றும் 44 வயதுடையவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அவர்கள் மேலதிக விசாரணைகளுக்காக மண்டபத்திலுள்ள தமிழ்நாடு கடலோர பாதுகாப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles