Saturday, April 19, 2025
29 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபுலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான அறிவிப்பு

புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான அறிவிப்பு

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையை எதிர்வரும் 15ஆம் திகதி நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று (13) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும் ​போதே அவர் இத​னைத் தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து வௌியிட்ட அவர், நேற்று (12) நள்ளிரவு முதல் நாடு முழுவதும் உள்ள ஒருங்கிணைப்பு நிலையங்களுக்கு வினாத்தாள்கள் வழங்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்தாண்டு புலமைப்பரிசில் பரீட்சைக்கு 323,879 பரீட்சார்த்திகள் தகுதி பெற்றுள்ளதுடன், அவர்கள் நாடளாவிய ரீதியில் 2,849 பரீட்சை நிலையங்களில் பரீட்சைக்குத் தோற்றவுள்ளனர்.

மேலும், விசேட தேவையுடைய மாணவர்களுக்காக 7 பரீட்சை நிலையங்கள் நிறுவப்பட்டுள்ளதுடன், மஹரகம வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெற்று வரும் சிறுவர்கள் அங்கிருந்து பரீட்சைக்கு தோற்றுவதற்காக பரீட்சை நிலையமொன்றும் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles