Sunday, March 15, 2026
28 C
Colombo
செய்திகள்விளையாட்டுபுதிய சாதனை படைத்த ரொனால்டோ

புதிய சாதனை படைத்த ரொனால்டோ

பிரபல கால்பந்து வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ (Cristiano Ronaldo) தனது அனைத்து சமூக வலைத்தளங்களிலும் சேர்ந்து ஒரு பில்லியன் பின்தொடர்பவர்களைப் (followers) பெற்றுள்ளார்.

சமூக வலைத்தளங்களான இன்ஸ்டாகிராம், பேஸ்புக், எக்ஸ் மற்றும் யூடியூப் ஆகியவற்றில் மொத்தமாக இவர் ஒரு பில்லியன் பின்தொடர்பவர்களைப் பெற்றுள்ளார்.

இந்தச் சாதனை மூலம் ரொனால்டோ, சமூக ஊடக வலைத்தளங்களில் ஒரு பில்லியன் பின்தொடர்பவர்களைக் கடந்த உலகின் முதல் நபர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.

இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள ரொனால்டோ,

உலகின் மிகப்பெரிய இடத்திற்கு உயர்ந்துள்ளதாகக் கருதுகிறேன். நான் எப்போதும் எனது குடும்பத்திற்காகவும் உங்களுக்காகவும் தான் விளையாடி உள்ளேன். என்னை நம்பி ஆதரவளித்த அனைவருக்கும் எனது நன்றி’ என இரசிகர்களுக்கு நன்றி என பதிவிட்டுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles