நியூசிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஒற்றை டெஸ்ட் போட்டி, ஒரு பந்து கூட வீசப்படாத நிலையில் கைவிடப்பட்டுள்ளது.
டெஸ்ட் வரலாற்றில் இவ்வாறு போட்டியொன்று கைவிடப்படும் 8ஆவது முறை இதுவெனவும், 1998ஆம் ஆண்டுக்குப் பின்னர் முதல் முறையாக இவ்வாறு போட்டியொன்று கைவிடப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது.
இந்தியாவின் கிரேட்டர் நொய்டா மைதானத்தில் குறித்த போட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில், சீரற்ற கால நிலை காரணமாக டெஸ்ட் போட்டியின் முதல் நான்கு நாட்களில் எந்தவொரு ஆட்டமும் இடம்பெறவில்லை.