ஜனாதிபதி தேர்தலின் பின்னர் வெளிநாடு செல்வதற்கு தமக்கு விசா பெற வேண்டிய அவசியமில்லை எனவும், 10 வருடங்கள் உலகில் எந்த நாட்டிலும் வசிப்பதற்கான விசேட விசாவொன்று தன்னிடம் உள்ளதாகவும் அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.
கண்டி ஸ்ரீ தலதா மாளிகையின் இன்று நடைபெற்ற சமய வழிபாடுகளின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
எதிர்க்கட்சி உறுப்பினர் ஒருவர் விடுத்த கருத்துக்கு பதிலளிக்கும் வகையில் அமைச்சர் இதனை கூறியுள்ளார்.
அடுத்த தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நிச்சயம் வெற்றி பெறுவார் எனவும் ஜனாதிபதி தேர்தலின் பின்னர் நீதி நடவடிக்கையை இரட்டிப்பாக்கி கடுமையாக அமுல்படுத்தப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.