Saturday, May 24, 2025
27.3 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதப்பியோடியவர்கள் மக்களின் ஆணையை கோர தகுதியற்றவர்கள்!

தப்பியோடியவர்கள் மக்களின் ஆணையை கோர தகுதியற்றவர்கள்!

பொருளாதார வீழ்ச்சியின் போது மக்களின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்துவதற்கு ஒத்துழைப்பு வழங்காது தப்பியோடிய சஜித்தும் அனுரவும் இன்று மக்களின் ஆணையை கோருவதற்கு தகுதி அற்றவர்கள் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

ருவன்வெலயில் நடைபெற்ற இயலும் ஸ்ரீலங்கா என்ற வெற்றிப் பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனத் தெரிவித்தார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வெற்றியை உறுதிப்படுத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த பேரணியில் பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டனர்.

இதன்போது, நெருக்கடி ஏற்பட்ட காலத்தில் மக்களின் தேவைகளை நிறைவேற்ற முன் வராத சஜித்தும் அநுரவும் தற்போது மக்கள் முன்வந்து பொய்யான வாக்குறுதிகளை வழங்குவதாக ரணில் விக்கிரமசிங்க குற்றம் சுமத்தியிருந்தார். இவ்விடயம் தொடா்பாக அவா் மேலும் தொிவிக்கையில்,

கடந்த காலத்தில் மக்களுக்கு ஏற்பட்ட கஷ்டங்களை வேடிக்கைப் பார்க்க முடியாது என்பதாலேயே நாட்டை நான் பொறுப்பேற்றுக் கொண்டேன்.

இன்று எல்லாப் பொருட்களும் தட்டுப்பாடின்றி கிடைக்கிறது. மக்களின் கஷ்டங்களை தீர்ப்பதற்காக ஒன்றுபடுமாறு அனுரவிற்கும் சஜித்துக்கும் அன்று அழைப்பு விடுத்தேன். ஆனால் அவர்கள் முன்வரவில்லை.

மக்களின் கஸ்டங்களை புரியாத இந்த இருவரும் இன்று மக்களின் ஆணையை கோர என்ன உரிமை இருக்கிறது என்று நான் கேள்வி எழுப்புகிறேன்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles