Friday, September 20, 2024
29 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதந்தைக்கு எமனான மகன்

தந்தைக்கு எமனான மகன்

தனமல்வில பிரதேசத்தில் ஒருவர் தனது தந்தையை கொலை செய்த சம்பவம் பதிவாகியுள்ளது.

தனமல்வில, போதாக பிரதேசத்தை சேர்ந்த 60 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையொருவரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் 25 வயதுடைய மகன் தனமல்வில பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்று (10) காலை வீட்டில் இருந்த தந்தையை தடி மற்றும் சுத்தியலால் தாக்கி அவர் கொலை செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.

கைதான சந்தேக நபர் வெல்லவாய நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

தெஹிவளையில் துப்பாக்கிச்சூடு: ஒருவர் காயம்

தெஹிவளை, கடவத்தை வீதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார். 45 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அவர் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இனந்தெரியாத துப்பாக்கிதாரி...

Keep exploring...

Related Articles