Friday, September 20, 2024
28 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஅருந்திக பெர்னாண்டோவிடம் 5 மணிநேர வாக்குமூலம்

அருந்திக பெர்னாண்டோவிடம் 5 மணிநேர வாக்குமூலம்

இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோவிடம் நீர்கொழும்பு பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் 5 மணித்தியாலங்களுக்கு மேலாக வாக்குமூலம் பெற்றுள்ளனர்.

30 இலட்சம் ரூபா மோசடி தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாடு தொடர்பில் இராஜாங்க அமைச்சரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதுவரையான விசாரணைகளில் தெரியவந்த தகவலின் அடிப்படையில் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட வய்க்காலை சேர்ந்த ரொஷான் சேனாநாயக்க மற்றும் கொச்சிக்கடையைச் சேர்ந்த மொஹமட் அலி ஆகிய இருவரையும் நீர்கொழும்பு பிரதான நீதவான் தலா 10 இலட்சம் சரீரப் பிணையில் விடுவித்துள்ளார்.

Keep exploring...

Related Articles