நைஜீரியா – அகெயி நகரில் உள்ள நெடுஞ்சாலையில் எரிபொருள் ஏற்றிச் சென்ற லொறி மீது மற்றொரு லொறி மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த கோர விபத்தில் 48 பேர் உயிரிழந்ததுடன், 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
அத்துடன், 2 லொறிகளும் வெடித்துச் சிதறியதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த விபத்து குறித்துத் தகவலறிந்த தீயணைப்பு மீட்புக்குழுவினர் மற்றும் பொலிஸார் சம்பவ இடத்திற்குச் சென்று, படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்துள்ளனர்.
மேலும், இந்த விபத்துக்கான காரணம் குறித்து பொலிஸார் விசாரணை நடத்தி வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
