பிரபல கால்பந்து வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ 900 கோல்கள் அடித்த முதல் வீரர் என்ற வரலாற்றுச் சாதனையை படைத்துள்ளார்.
ரொனால்டோ இதுவரை கால்பந்து உலகில் பல சாதனைகளைப் படைத்திருக்கிறார்.
இவர் படைக்காத சாதனைகளில், எவராலும் தொட முடியாத ஒரு கிண்ணம் என்றால் அது உலகக் கிண்ணம் ஆகும்.
க்ளப் போட்டிகளில் கிட்டத் தட்ட அனைத்து கிண்ணங்களையும் வென்று விட்டாலும், உலகக் கிண்ணத்தில் போர்ச்சுகல் அணி காலிறுதி வரை சென்றாலும், அதைத் தாண்டி அடுத்த கட்டமான அரை இறுதிப் போட்டிக்கு இது வரை அவர் தகுதி பெற்றதே இல்லை.
இந்தநிலையில், ரொனால்டோ கால்பந்து உலகில் புதிய சாதனை படைத்துள்ளார்.
நேஷன்ஸ் லீக் போட்டியில் குரோஷியாவுக்கு எதிராக போர்ச்சுகல் அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.