Tuesday, September 17, 2024
29 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகடவுச்சீட்டு நெருக்கடியை தவிர்க்க நடவடிக்கை

கடவுச்சீட்டு நெருக்கடியை தவிர்க்க நடவடிக்கை

எதிர்வரும் 15 ஆம் திகதிக்குள் 50,000 கடவுச்சீட்டுக்கள் நாட்டுக்குக் கிடைக்குமென குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்மூலம் கடவுச்சீட்டு விநியோகத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு தீர்வு கிடைக்கும் எனவும் அதுவரை புதிய கடவுச்சீட்டுகளை வழங்குவது நாளாந்தம் 1,000 ஆக இருக்க வேண்டும் என குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும், புதிய இலத்திரனியல் கடவுச்சீட்டுகளை அறிமுகப்படுத்தவுள்ளதாக திணைக்களம் அறிவித்த நிலையில், இந்த முயற்சிக்கான ஒப்பந்தம் சர்வதேச நிறுவனமொன்றுக்கு வழங்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Keep exploring...

Related Articles