Friday, September 20, 2024
28 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமனைவிக்கு எமனான கணவன்

மனைவிக்கு எமனான கணவன்

அவிசாவளை, கெடஹெத்த பிரதேசத்தில் கணவன் தனது மனைவியை கோடரியால் தாக்கி கொலை செய்துள்ள்ளார்.

இந்த சம்பவம் நேற்று (02) மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

திவுரும்பிட்டிய, கெடஹெத்த பிரதேசத்தை சேர்ந்த 43 வயதுடைய பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவருக்கும் சந்தேகநபருக்கும் இடையிலான குடும்பத் தகராறு காரணமாக இந்தக் கொலை இடம்பெற்றுள்ளமை தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபரின் கணவரை பொலிஸார் கைது செய்துள்ளதுடன், அவிசாவளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Keep exploring...

Related Articles