Thursday, September 18, 2025
25 C
Colombo
செய்திகள்உள்நாட்டுவெள்ள நிலைமை குறித்து வெளியான அறிவிப்பு

வெள்ள நிலைமை குறித்து வெளியான அறிவிப்பு

அடுத்த 24 மணித்தியாலங்களில் புலத்சிங்கள, மதுராவல மற்றும் பாலிந்த நுவர ஆகிய பிரதேசங்களின் தாழ்நிலப் பகுதிகளுக்கு சிறு வெள்ளம் ஏற்படக்கூடிய அபாய நிலை உள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.

களு கங்கையின் குடா கங்கை உப குளம் பகுதிக்கு கணிசமான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதுடன், தொடர்ந்தும் மழை பெய்து வருவதாகவும் நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக அப்பகுதிகளில் உள்ள வீதிகள் நீரில் மூழ்கும் அபாயம் காணப்படுவதாகவும் இதன் காரணமாக அப்பகுதி மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு நீர்ப்பாசன திணைக்களம் கேட்டுக் கொண்டுள்ளது

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles