Wednesday, February 12, 2025
32 C
Colombo
செய்திகள்உள்நாட்டுசட்டவிரோத தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் தொடர்பில் முறைப்பாடுகள்

சட்டவிரோத தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் தொடர்பில் முறைப்பாடுகள்

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் சுதந்திரமானதும் நீதியானதுமான மக்கள் அமைப்பான கபே தேர்தல் கண்காணிப்பு அமைப்புக்கு இதுவரை 435 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகக் கபே அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் மனாஸ் மக்கின் தெரிவித்துள்ளார்.

இவற்றில் அதிகளவான முறைப்பாடுகள் சட்டவிரோத தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் தொடர்பிலேயே பதிவாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தலின் போது கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்காக கபே அமைப்பு, 25 மாவட்டங்களிலும் 25 மாவட்ட இணைப்பாளர்கள் மற்றும் 160 நீண்டகால கண்காணிப்பாளர்களைக் கடமைகளில் ஈடுபடுத்தியுள்ளது.

அதன்படி, தேர்தல் பிரச்சார நிதியினை கண்காணிப்பதற்காக 40 தேர்தல் தொகுதிகளில் 40 நீண்டகால கண்காணிப்பாளர்களை நிறுவி தேர்தல் பிரச்சாரத்திற்காக ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் அமைச்சர்களும் செலவு செய்கின்ற விதம் மற்றும் அவர்களின் செலவுகள் தொடர்பிலான கண்காணிப்பினை முன்னெடுத்து வருகின்றது.

அத்துடன், தேர்தல் தினத்தன்று கண்காணிப்பு நடவடிக்கைகளுக்காக நாடளாவிய ரீதியில் 3,500 கண்காணிப்பாளர்களை கடமைகளில் ஈடுபடுத்தவுள்ளதாக கபே அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் மனாஸ் மக்கின் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles