Saturday, August 2, 2025
26.7 C
Colombo
செய்திகள்விளையாட்டுமைதானத்தில் சுருண்டு விழுந்த கால்பந்து அணி வீரர் மரணம்

மைதானத்தில் சுருண்டு விழுந்த கால்பந்து அணி வீரர் மரணம்

உருகுவே கால்பந்து அணி வீரர் ஜுவான் இஸ்குவேர்டோ மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.

பிரேசிலில் இடம்பெற்ற Nacional மற்றும் Sao Paulo அணிகளுக்கு இடையிலான கால்பந்து போட்டியில், உருகுவே அணி வீரர் ஜுவான் இஸ்குவேர்டோ (Juan Izquierdo) மைதானத்திலேயே சரிந்து விழுந்தார்.

அதனைத் தொடர்ந்து உடனடியாக அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தநிலையில், 5 நாட்களுக்குப் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்நிலையில், அவர் மாரடைப்பால் உயிரிழந்ததாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles