Saturday, May 3, 2025
26 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமனைவியை இழந்த துயரத்தில் தவறான முடிவெடுத்த கணவன்

மனைவியை இழந்த துயரத்தில் தவறான முடிவெடுத்த கணவன்

யாழ்ப்பாணத்தில் மனைவியின் மரணத்தினால் மனவேதனையில் இருந்த ஆண் ஒருவர் நேற்று (27) தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணம், நாவற்குழி பகுதியைச் சேர்ந்த 72 வயதுடைய மனுவல் சூசைமுத்து என்ற நபரே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சுமார் ஒரு வருடத்திற்கு முன்னர் குறித்த நபரின் மனைவி சுகவீனம் காரணமாக உயிரிழந்துள்ளதுடன், குறித்த நபர் தனது மனைவியின் மரணத்தையடுத்து மிகுந்த மனவேதனை அடைந்துள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.

உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles