Thursday, September 19, 2024
28 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகாப்பற்றப்பட்ட இந்திய மீனவர்கள் துணை தூதரகத்தில் ஒப்படைப்பு

காப்பற்றப்பட்ட இந்திய மீனவர்கள் துணை தூதரகத்தில் ஒப்படைப்பு

கச்சதீவுக்கு அண்மையில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளான நிலையில் காப்பாற்றப்பட்ட இரண்டு இந்திய மீனவர்களும் இன்று யாழ்ப்பாணம் இந்திய துணைத் தூதரகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

நான்கு மீனவர்களுடன் மீன்பிடியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த இந்திய படகு ஒன்று நேற்றையதினம் தண்ணீரில் மூழ்கி விபத்துக்குள்ளானது.

இதன்போது அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த கடற்படையினர் இரண்டு மீனவர்களை மீட்டுள்ளனர்.

அத்துடன் காணாமல் போன மற்ற இரண்டு மீனவர்களையும் தேடும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், மீட்கப்பட்ட மீனவர்கள் இருவரும் நேற்றையதினம் நெடுந்தீவு பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

அவர்கள் இன்றையதினம் யாழ்ப்பாண இந்திய துணை தூதரகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.

அவர்கள் இருவரையும் நாளைய தினம் பலாலி விமான நிலையமூடாக இந்தியாவுக்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகளை யாழ்ப்பாண இந்திய துணை தூதரகம் முன்னெடுத்து வருகிறது.

Keep exploring...

Related Articles