Tuesday, September 17, 2024
29 C
Colombo
செய்திகள்உலகம்கிளிமஞ்சாரோ சிகரத்தை தொட்டு சாதனை படைத்த 5 வயது சிறுவன்

கிளிமஞ்சாரோ சிகரத்தை தொட்டு சாதனை படைத்த 5 வயது சிறுவன்

ஆசியாவிலேயே குறைந்த வயதில் கிளிமஞ்சாரோ சிகரத்தைத் தொட்டவர் என்ற சாதனையைப் பஞ்சாபைச் சேர்ந்த 5 வயதான டெக்பீர் சிங் படைத்துள்ளார்.

தான்சானியாவில் 19,340 அடி உயரத்தில் அமைந்துள்ள கிளிமஞ்சாரோ ஆப்பிரிக்காவின் மிக உயரமான சிகரம் ஆகும்.

இந்நிலையில், ஆகஸ்ட் 18 ஆம் திகதி கிளிமஞ்சாரோ மலையின் மீது ஏற துவங்கிய குறித்த சிறுவன், ஓகஸ்ட் 23 ஆம் திகதி அந்த மலையின் மிக உயரமான இடமான உஹுருவை அடைந்தார்.

டெக்பீர் சிங்கின் இந்த சாதனைக்காக அவரின் தந்தையும் அவருடன் மலை ஏறியுள்ளார்.

தனது மகனின் இந்த சாதனை குறித்து பேசிய அவரது தந்தை,

‘டெக்பீர் சிங் இதற்காக கடுமையான மலையேற்ற பயிற்சிகள், இதயம் மற்றும் நுரையீரலுக்கான சுவாச பயிற்சிகள் ஆகியவற்றை மேற்கொண்டார். அவரது இந்த சாதனை எங்கள் குடும்பத்தை பெருமைப்படுத்தியுள்ளது’ என்றார்.

Keep exploring...

Related Articles