Tuesday, August 19, 2025
27.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதவறான முடிவெடுத்த சிந்துஜாவின் கணவர்

தவறான முடிவெடுத்த சிந்துஜாவின் கணவர்

மன்னார் வைத்தியசாலையில் அண்மையில் உயிரிழந்த சிந்துஜாவின் கணவர் நேற்று இரவு தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளார்.

கடந்த மாதம் மன்னார் வைத்தியசாலையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட அவர் மருத்துவ தவறு காரணமாக உயிரிழந்திருந்தார்.

இது தொடர்பான விசாரணைகள் தற்போது இடம்பெற்று வருகின்றன.

இந்நிலையில் அவரது கணவர் நேற்றையதினம் அவரது வீட்டில் தவறான முடிவெடுத்து உயிர்மாய்க்க முற்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்ததுடன், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருந்தார்.

வவுனியா பனிக்கர் புளியங்குளத்தை சேர்ந்த 26 வயதுடைய எஸ்.சுதன் என்ற குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இதேவேளை, மன்னார் பொது வைத்தியசாலையில் இடம்பெற்ற இளம் தாயின் மரணம் தொடர்பாக தாதியர் மற்றும் குடும்ப நல சுகாதார உத்தியோகத்தர்கள் பதவி இடைநீக்கம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து வைத்தியர் ஒருவரும் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles