Wednesday, July 23, 2025
28.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகாலியில் ஆணொருவரின் சடலம் மீட்பு

காலியில் ஆணொருவரின் சடலம் மீட்பு

காலி சீமெந்து தொழிற்சாலைக்கு முன்பாக உள்ள ஏரியில் மிதந்துக் கொண்டிருந்த சடலமொன்று பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.

இன்று (22) காலை ருமஸ்ஸல சீமெந்து தொழிற்சாலைக்கு முன்பாக உள்ள ஏரியில் சடலமமொன்று மிதப்பதாக தகவல் கிடைத்ததாக ஹபராதுவ பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவரின் அடையாளம் தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், உயிரிழந்தவர் 30 வயதுடைய காலி, நாகியாதெனிய பிரதேசத்தை சேர்ந்தவராவார்.

பிரேத பரிசோதனைக்காக சடலம் கராப்பிட்டிய வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹபராதுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles