ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான தலதா அத்துகோரள இன்று (21) தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
இன்று பாராளுமன்றில் விசேட அறிக்கையொன்றை வெளியிட்டு அவர் இதனை குறிப்பிட்டார்.
அத்துடன், ஐக்கிய சக்தி கட்சியிலிருந்தும் விலகுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.