Saturday, July 5, 2025
31.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபுதையல் தோண்டிய ஒருவர் கைது

புதையல் தோண்டிய ஒருவர் கைது

வவுனியா பன்றிகெய்தகுளம் பகுதியில் இன்று அதிகாலை புதையல் தோண்ட முற்பட்ட குற்றச்சாட்டில் ஒருவர் ஓமந்தை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது அவரிடம் இருந்து புதையலை கண்டறிவதற்காக பயன்படுத்தபடுத்தப்படும் ஸ்கேனர் கருவி உட்பட மண் அகழ்வதற்கான உபகரணங்கள் மற்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.

வவுனியா இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலிற்கு அமைவாக ஓமந்தை பொலிசாரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது 54 வயதுடைய ரத்தினம் மதிவதனன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரை இன்று வவுனியா நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணையை வவுனியா ஓமந்தை பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles