Saturday, September 21, 2024
28 C
Colombo
செய்திகள்உள்நாட்டுசிறுவர்களிடையே பரவும் ஆஸ்துமா நோய்

சிறுவர்களிடையே பரவும் ஆஸ்துமா நோய்

இந்த நாட்களில் சிறுவர்களிடையே இளைப்பு நோய் (ஆஸ்துமா) அதிகரித்துள்ளதாக கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.

கடந்த சில நாட்களாக இன்புளுவன்சா நோயாளிகளின் அதிகரிப்பும் பதிவாகியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

“இருமல் மற்றும் சுவாசிப்பதில் சிரமம் என்ற பிரச்சினை குழந்தை பருவ ஆஸ்துமா காரணமாக ஏற்படலாம். இரண்டாவதாக, வைரஸ் காய்ச்சல் பரவுவதற்கான வாய்ப்பு காணப்படுகின்றது. குறிப்பாக மேல் சுவாசக்குழாய்களில் வைரஸ் காய்ச்சல் பரவுகின்றது.

இருமல், சளி இருந்தால், அந்த குழந்தைகளை வீட்டிலேயே வைத்திருங்கள். இருமலுடன் தொடர்ந்து காய்ச்சல் இருந்தால், மேல் சுவாசக் குழாயில் வைரஸ் உள்ளதா என்று பரிசோதிக்க வேண்டும்.

குளிர் காலத்தில் வைரஸ்ஸின் தாக்கம் அதிகரிப்பதால் சிறுவர்களை கவனமாக பார்த்துக்கொள்ள வேண்டும்.” என்று தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles