Thursday, September 19, 2024
28 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதேர்தலுடன் தொடர்புடைய அச்சுப்பணிகள் நாளை ஆரம்பம்

தேர்தலுடன் தொடர்புடைய அச்சுப்பணிகள் நாளை ஆரம்பம்

ஜனாதிபதி தேர்தலுடன் தொடர்புடைய அச்சுப்பணிகள் நாளை (16) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அரச அச்சகர் கங்கானி கல்பனா லியனகேதெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் வேட்புமனு தாக்கல் நிறைவடைந்துள்ளதுடன் தேர்தல்கள் ஆணைக்குழுவின் அனுமதி வழங்ப்பட்ட பின்னர் அச்சுப்பணிகள் ஆரம்பமாகவுள்ளன.

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு 40 வேட்பாளர்கள் கட்டுப்பனம் செலுத்தியுள்ள நிலையில் வாக்குச்சீட்டை வடிவமைப்பது தொடர்பாக அரச அச்சகர் கங்கானி கல்பனா லியனகே கருத்து தெரிவித்துள்ளார்.

ஒரே வாக்குச் சீட்டில் வாக்காளரின் பெயர்களும் அவர்களின் இலட்சினைகளும் அச்சிடப்பட முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும் ஒரே வாக்குச்சீட்டில் அச்சிடுவதா அல்லது இரண்டு வாக்குச்சீட்டுகளாக அச்சிடுவதா என்பது குறித்து தேர்தல் ஆணைக்குழு வழங்கும் அறிவுரைகளுக்கு அமைய வாக்குச்சீட்டு அச்சிடும் பணிகள் முன்னெடுக்கப்படும் எனவும் கூறியுள்ளார்.

வெடிபொருட்களுடன் நால்வர் கைது

வெடிபொருட்களுடன் 4 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நாவுல - நிகுல வீதியில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டதாக நாவுல பொலிஸார் தெரிவித்தனர். இதன்போது, மூன்று...

Keep exploring...

Related Articles