Tuesday, September 16, 2025
28.9 C
Colombo
செய்திகள்உள்நாட்டுரணில் தோட்ட தொழிலாளர்களை ஏமாற்றி விட்டார் - திகாம்பரம்

ரணில் தோட்ட தொழிலாளர்களை ஏமாற்றி விட்டார் – திகாம்பரம்

தோட்டத் தொழிலாளர்களுக்கு 1700 ரூபா சம்பள அதிகரிப்பு தருவதாக கூறி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கம் மக்களை ஏமாற்றியதாக பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.

இன்று (13) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மனுஷ நாணயக்கார, ஜீவன் தொண்டமான் உள்ளிட்டோர் தோட்ட மக்களுக்கு வாக்குறுதி வழங்கியுள்ளதாகவும், இவர்களது பொய்யான பாசாங்குகளுக்கு தோட்ட மக்கள் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வாக்குகளால் பதிலளிப்பார்கள் எனவும் அவர் கூறினார்.

சஜித் பிரேமதாச தலைமையிலான அரசாங்கம் வந்தவுடன் தோட்டத் தொழிலாளர்களுக்கு உரிய சம்பளம் வழங்கப்படும் என வலியுறுத்திய அவர், அப்பாவி தோட்டத் தொழிலாளர்களை ரணில் ஏமாற்றிவிட்டார் எனவும் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles