இலங்கை மற்றும் அயர்லாந்து மகளிர் கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான இருபதுக்கு இருபது தொடரின் இரண்டாவதும் இறுதியுமான போட்டி இன்று (13) நடைபெறவுள்ளது.
இந்தப் போட்டி டப்ளினில் உள்ளூர் நேரப்படி இரவு 8.30 மணிக்கு நடைபெறவுள்ளது.
இப் போட்டித் தொடரின் முதல் போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றதுடன் இலங்கை மகளிர் அணி அயர்லாந்து அணியை 07 விக்கெட்டுக்களால் தோற்கடித்தது.
இலங்கை மகளிர் அணிக்கு அனுஷ்கா சஞ்சீவனியும், அயர்லாந்து அணிக்கு லோரா டெலானியும் தலைமை தாங்குகின்றனர்.