கொழும்பு – கண்டி வீதியின் வேவல்தெனிய சந்தியில் இன்று (12) மாலை இடம்பெற்ற கோர விபத்தில் ஒரு குழந்தை உட்பட மூவர் உயிரிழந்துள்ளனர்.
நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறி மீது முச்சக்கரவண்டி ஒன்று மோதி, இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இந்த விபத்தில் மேலும் மூவர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.