பண்டாரகம – கஸ்பேவ வீதியில் இபோச பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
பண்டாரகம – கஸ்பேவ வீதியில் வல்மில்ல கல்கடே சந்திக்கு அருகில் குறித்த பேருந்து வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அக்குரெஸ்ஸ பிரதேசத்தில் வசிக்கும் 45-55 வயதுக்கு இடைப்பட்ட இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
பேருந்தில் பயணித்த பெண்ணின் கை பலத்த சேதமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.