எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிடும் முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்கவுக்கான கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது.
அவரின் உறவினரான ஆலோக ரணசிங்க என்பவரே ரொஷான் ரணசிங்கவுக்கான கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.