டிஜிட்டல் திரைகளைப் பயன்படுத்துவதற்கு இரண்டு வயதுக்குட்பட்ட குழந்தைகளை அனுமதிப்பது பொருத்தமற்றது என சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் விசேட வைத்திய நிபுணர் இனோகா விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
டிஜிட்டல் திரைகளைப் பயன்படுத்துவதனால் சிறுவர்களின் மூளை வளர்ச்சி வீதம் பாதிக்கப்பட்டு வருவதாகவும் அவர் சுட்டிகாட்டியுள்ளார்.
அதன்படி, பெரும்பாலான பெற்றோர் அதிக வேலைப்பளுவுக்கு மத்தியிலே தங்களது நேரத்தைச் செலவிடுவதால் தங்களது வேலைகளை இலகுவாக முன்னெடுப்பதற்காக அவர்கள் தங்களது குழந்தைகளிடம் கையடக்க தொலைபேசிகளை வழங்குகின்றனர்.
இந்நிலையில், குழந்தைகள் தொடர்ந்தும், கையடக்க தொலைபேசிகளைப் பயன்படுத்தும்போது அவர்களின் மனநிலையில் எதிர்மறையான விளைவுகள் ஏற்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.