Sunday, August 24, 2025
30 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇந்திய மீனவர்கள் 35 பேர் கைது

இந்திய மீனவர்கள் 35 பேர் கைது

இலங்கையின் கடற்பகுதியில் சட்டவிரோதமான முறையில் மீன்பிடித்த 35 இந்திய மீனவர்களை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

குதிரைமலை முனையிலிருந்து இலங்கை கடற்பரப்பில் கடற்படையினர் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்.

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 4 இந்திய மீன்பிடி படகுகள் இந்திய கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் கல்பிட்டி கடற்படை கப்பல் விஜயா நிறுவனத்திற்கு அழைத்து வரப்பட்டு மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கல்பிட்டி மீன்பிடி பரிசோதகரிடம் ஒப்படைக்கப்பட உள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles