தேசிய அடையாள அட்டை இல்லாத வாக்காளர்கள், ஓட்டுநர் உரிமம், ஓய்வூதிய அடையாள அட்டை அல்லது கடவுச்சீட்டு ஆகியவற்றைப் பயன்படுத்தி வாக்களிக்கலாம் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
மேற்குறிப்பிட்ட அடையாளத்தை உறுதிப்படுத்தும் ஆவணங்கள் எதுவும் இல்லாதவர்கள் தேர்தல்கள் ஆணைக்குழுவினால் வழங்கப்படும் தற்காலிக அடையாள அட்டையை பெற்றுக்கொள்ள முடியும் என தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.
அதன்படி, உங்கள் பிரதேச கிராம அலுவலரை சந்தித்து தேவையான ஆவணங்களை பூர்த்தி செய்த பின் தற்காலிக அடையாள அட்டை வழங்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.
