Thursday, September 19, 2024
28 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகையூட்டல் குற்றச்சாட்டில் வியாழேந்திரனின் பிரத்தியேக செயலாளர் கைது

கையூட்டல் குற்றச்சாட்டில் வியாழேந்திரனின் பிரத்தியேக செயலாளர் கைது

கையூட்டல் சம்பவம் தொடர்பில் இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரனின் பிரத்தியேக செயலாளர் உள்ளிட்ட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த இருவரும் நேற்று மட்டக்களப்பில் வைத்து கையூட்டல் எதிர்ப்பு ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மட்டக்களப்பில் மணல் அகழ்வதற்காகப் புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்க பணியகத்தினால் வழங்கப்படும் அனுமதிப் பத்திரத்தை உரிய தரப்பினரிடம் வழங்குவதற்காக 15 இலட்சம் ரூபாவை கையூட்டலாகப் பெற முனைந்த போதே அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரனின் பிரத்தியேக செயலாளர், அமைச்சரின் மட்டக்களப்பில் உள்ள காரியாலயத்திலும், கரடியனாறு பகுதியில் உள்ள இராஜாங்க அமைச்சரின் அரசியல் செயற்பாட்டாளர், மட்டக்களப்பு பகுதியில் உள்ள வங்கியொன்றுக்கு அருகிலும் வைத்துக் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதான இருவரும் நீதிமன்றில் பிரசன்னப்படுத்தபடவுள்ளதாகக் கையூட்டல் எதிர்ப்பு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

வெடிபொருட்களுடன் நால்வர் கைது

வெடிபொருட்களுடன் 4 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நாவுல - நிகுல வீதியில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டதாக நாவுல பொலிஸார் தெரிவித்தனர். இதன்போது, மூன்று...

Keep exploring...

Related Articles